டீஸ்டா செதல்வாத், ஆர்.பி.ஸ்ரீகுமார் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறுக!
ஜனநாயக உரிமைகள் மீது குஜராத் பாஜக அரசு அருவருப்பான தாக்குதல்
மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
புதுதில்லி, ஜூன் 26- டீஸ்தா செதல்வாத், ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் இதரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் 2002 வன்முறை வெறி யாட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி தொடர்ந்து விடாப்பிடியாகப் போராடிவந்த டீஸ்டா செதல்வாத் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு கண்டனம் தெரி வித்துக் கொள்கிறது. அவருடைய கைது ஆட்சியாளர்களின் கீழ் மதவெறி வன்முறை நிகழ்வுகளைத் தட்டிக் கேட்கும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துக் குடிமக்களுக்கும் ஓர் அச்சுறுத்தலாகும். இது குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீது ஏவப் பட்டுள்ள அருவருப்பான தாக்குதலாகும். எனினும் உச்சநீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வாயம், சமீபத்தில் அளித்த தீர்ப்பில், “இவ்வாறு நீதிமன்ற நடைமுறையைத் துஷ்பிரயோகம் செய்வதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டதன் கீழ் குஜராத் மாநில நிர்வாகம் அவரைக் கைது செய்யும் நடவடிக்கை யைச் செயல்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு இந்தத் தீர்ப்பின்படி நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட எந்தவொரு சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நீதிமன்ற மேல்முறையீடுகளின் வரையறைக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட வேண்டும், மற்றும் ஜாகியா ஜஃப்ரி மற்றும் டீஸ்டா செதல்வாத் இந்த வழக்கில் செய்திருப்பது போன்று எவரேனும் இதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்தால், பின் அவர்கள் மீது “நீதிமன்ற நடைமுறையைத் துஷ்பிரயோகம் செய்ததாக” குற்றச்சாட்டு வனைந்திட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இவ்வாறு நீதி கோரி கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஒரு போராட்டம் அசாதாரணமான இழிவான சொற்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அமைத்த வழக்கறிஞர் குழுவே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பல பரிந்துரைகளுடன் ஒத்துப்போயுள்ள அதே சமயத்தில், சமூகத்தினரிடையே வெறுப்பை உமிழ்ந்ததைத் தொடர்ந்து இந்தியத் தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறது. 2004 ஏப்ரலில், இதே உச்சநீதி மன்றம், அப்போது ஆட்சியிலிருந்த தலைவர்களை, “நவீன கால நீரோக்கள்” என்று சித்தரித்திருந்தது. இப்போது வந்துள்ள தீர்ப்பு இந்தப் பிரச்சனைகள் எதையும் விவாதித்திடவில்லை. இது, நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்திருந்த டீஸ்டா போன்றவர்களைத் தண்டித்திருக்கிறது. இது நீதிமன்றத் தீர்ப்பை சரிசெய்திடும் மனு (curative petition) தாக்கல் செய்வதற்கானப் பொருத்தமான வழக்காகும். டீஸ்டா செதல்வாத் , ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் இதரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர்களை விடுவித்திட வேண்டும். . இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)
குஜராத் முஸ்லிம் படுகொலை வழக்குகளை நடத்தியவர்
புதுதில்லி,ஜூன் 26- குஜராத் மாநிலத்தில் சங் பரிவாரக் கும்பல்களால் முஸ்லிம் மக்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கை நடத்தி வந்த சமூக செயற் பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்தை ஜூன் 25 அன்று குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத் பாஜக அரசின் வன்மச் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவாரக்கும்பல்களால் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்தது. இதில் பல ஆயிரம் முஸ்லிம் கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட அப்போதைய குஜராத் முத லமைச்சரும் தற்போதைய பிரதமரு மான மோடி உள்பட 64 பேர் விடுவிக்கப் பட்டனர். இதற்கு எதிராக, கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரி யின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி என் பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்தமனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை யன்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சான்டா க்ரூஸ் பகுதியில் வசித்து வந்த சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்தை குஜராத் மாநில அகமதாபாத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சனிக்கிழமை யன்று கைது செய்தனர். முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமாரையும் கைது செய்தனர். ஜூன் 26 ஞாயிறன்று அதி காலை அகமதாபாத்தில் உள்ள குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு டீஸ்டா செதல்வாத் அழைத்துவரப்பட்டார். குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு மற்றும் விசாரணை ஆணையத்திடம் டீஸ்டா செதல்வாத் வழங்கியதாகக் கூறி குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல் நிலையத்தில் டி.பி.பராட் என்ற குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் புகார் அளித்தார். இந்தப் புகாரை உடனடியாகவே ஏற்றுக்கொண்டு, டீஸ்டா செதல்வாத் கைது செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உட்பட முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்ட வழக்கை ஜாகியா ஜாஃப்ரியுடன் இணைந்து நடத்தி வந்தவர் சமூகச் செயற் பாட்டாளர் டீஸ்டா செதல்வாத். தற்போது அந்த வழக்கிலிருந்து மோடி உட்பட 64 பேரும் விடுவிக்கப்பட்டதால் , வன்மத்துடன் டீஸ்டா செதல்வாத்தை குஜராத் பாஜக அரசு கைது செய்துள்ளதாக அரசியல் கட்சி யினர், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டித்துள் ளனர்.
டீஸ்டா மீதான பொய் வழக்கை ரத்து செய்க: மாதர் சங்கம்
குஜராத் காவல்துறையினர், டீஸ்டா செதல்வாத்தைக் கைது செய்திருப்பதற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா மற்றும் பொதுச் செய லாளர் மரியம் தாவ்லே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளில் குஜராத் எம்.பி., ஈசான் ஜாஃப்ரி 69 பேர்களுடன் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில், திருமதி ஜகியா ஜாஃப்ரியுடன் இணைந்து வழக்கை நடத்தி வந்த மனித உரிமைகள் செயற்பாட்டா ளர் டீஸ்டா செதல்வாத், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டவுடன், குஜராத் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார். முன்மாதிரியான தைரியத்து டன் செயல்பட்டமைக்காக அவர் பழி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவ ருக்கு எதிரான பொய் வழக்கை உடனடி யாக விலக்கிக்கொள்ள வேண்டும். அவருக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். (ந.நி.)