tamilnadu

இதுவரை 7,560 ஏக்கர் கோயில்  நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன!

இதுவரை 7,560 ஏக்கர் கோயில்  நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன!

சென்னை, மே 19 - தமிழ்நாட்டில் இதுவரைக்கும் ஆக்கிரமிப்பில் இருந்து 7,560 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மே 19 ஆம் தேதி ஒருநாள் மட்டும் 8 கோவில்களில் குடமுழுக்கு நடந்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் 2,956 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. ஜூன் 5 ஆம் தேதி  நாகை மாவட்டம், திருப்புகழூரில் உள்ள கோயிலில் 3  ஆயிரமாவது குடமுழுக்கு நடக்கிறது. இதுவரை 7 ஆயி ரத்து 560 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து  மீட்கப்பட்டுள்ளன. நில அளவை கற்கள் இரண்டு லட்சத்தை நிறைவு செய்ய இருக்கிறோம்” என்றார். சாத்தான் வேதம் ஓதுகிறது “ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாட்டுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் சம்பந்தம் உள்ளது. அதற்கு முன்பு எந்த சம்பந்தமும் தமிழ்நாட்டோடு கிடை யாது. தமிழ் மொழியையே இங்கு வந்துதான் கற்றுக்  கொள்கிறேன் எனக் கூறுகிறார். அவர் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என தெரிவித்தார்” என்றும் அமைச்சர் கூறினார்.