சிறு தொழில் - சிறு கடைகளுக்கும் கட்டாய உரிம உத்தரவை மறுபரிசீலனை செய்க!
தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 30 - சிறு தொழில்- சிறு கடைகளுக்கும் கூட கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் என்ற அரசாணையை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், கூறப்பட்டிருப்பதாவது: கட்டாய உரிம உத்தரவால் எளிய மக்களுக்கே பாதிப்பு தமிழ்நாட்டில், கிராம ஊராட்சிகள் வணிக உரிமம் வழங்குவதற்கான விதிகள் 2025 அரசு ஆணையின் படி, தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் 48 வகையான சிறு தொழில்கள் மற்றும் 119 வகையான சேவைத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் இனி தங்கள் தொழிலை தொடர வேண்டுமெனில் உரிமம் பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பெருநிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை அனைத்து தரப்பினருக்கும் இனிமேல் உரிமம் கட்டாயம் எனும் அரசின் இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் லட்சக் கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்நிலையும் பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகும். தனிப்பெண்கள், முதியவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும்! தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் போதுமான வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், தங்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காக பெரும் பகுதி மக்கள், சிறு கடைகளை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான கடைகள் சிறிய பெட்டிக்கடைகளாகவோ அல்லது வீடுகளின் முன்புறத்திலோ தான் அமைந்திருக்கின்றன. இவர்களில் மிகக் கணிசமானோர் தனிப் பெண்களாகவும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களாகவும், உடல் உழைப்பு செலுத்த முடியாத வயதானவர்களாகவுமே இருக்கின்ற னர். இவர்களால் நடத்தப்படும் சிறு கடைகளுக்கும் கூட ரூ. 250-லிருந்து ரூ. 30,000- வரையில் உரிமக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் முற்றாக பாதித்து விடும். அரசாணையில் மாற்றங்களை செய்க! எனவே, பெரும் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ள தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நீங்கலாக சிறிய கடைகள் மற்றும் சிறிய அளவிலான சுயதொழில்களுக்கு கட்டாய உரிமம் என்பதை தமிழக அரசு முற்றிலு மாக தவிர்த்து அவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டு மெனவும், அதற்கேற்ற வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பெ. சண்முகம் வலி யுறுத்தியுள்ளார்.