tamilnadu

img

இடதுசாரி சித்தாந்தம் மோடிக்கு ஆபத்தானது

எர்ணாகுளம், மார்ச் 1- தேசவிரோதக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி களால் முன்வைக்கப்படும் மாற்று சிந்தாந்தம் மோடிக்கு ஆபத்தானது என்றும், ஒன்றிய அரசின் கொள்கைகள் அரசியல் சட்டத்திற்கு முரணானவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். எர்ணாகுளம் மரைன் டிரைவில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கேரள மாநில  மாநாட்டை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:  நாடு முழுவதும் நெருக்கடியான கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. நாட்டின் சுரண்டப்படும் வர்க்கங்கள், தொழிலாளர் வர்க்கம் மற்றும் விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவா திப்பது மட்டுமல்லாமல், நாட்டில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சித்தாந்தங்களின் தலையீட்டை யும் ஆய்வு செய்து, அதை எதிர்கொண்டு முன்னேற கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை கட்சியின் மாநாடுகள் உருவாக்குகின்றன.

நாட்டின் பிரதமர் காட்சி ஊடகம் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். ‘இடதுசாரிகள் இந்தியாவின் ஒரு மூலையில் மட்டுமே உள்ளனர், கேரளாவில் மட்டுமே உள்ள னர், ஆனால் அவர்கள் மிகவும் ஆபத்தான சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள. அது இந்த நாட்டில் ஆபத்தை உருவாக்கும். எனவே இவர்களை அகற்றுவதே முக்கிய நோக்கம்’ என்று அவர் குறிப்பிட்டுக் காட்டினார். ஏன் இந்த சித்தாந்தம் ஆபத்தானது? ஏனென்றால், பாஜக அரசு கடைப்பிடிக்கும் - நாட்டுக்கு கேடு விளைவிக்கும் - கொள்கைகளுக்கு மாற்றாக இடதுசாரிகள் முன்மொழிகின்றனர்.

நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதற்கு பதிலாக மாற்று வழியை இடதுசாரிகள் முன்வைக் கின்றனர். அந்த மாற்றுக் கொள்கையை செயல் படுத்தும் களமாக கேரளா மாறி வருகிறது. அதனால் தான் கேரளாவும் இடதுசாரிகளும் பிரதமருக்கு ஆபத்தானவர்களாகத் தெரிகிறார்கள். கட்சியின் கேரள மாநில மாநாடு தனியாக எதிர்கால கேரளாவின் பார்வை மற்றும் மேம்பாட்டு அணுகுமுறை பற்றி விவாதிக்கிறது. இது சரியான வடிவத்தில் நாம் முன் வைக்கும் மாற்றை வலுப் படுத்த உதவும். பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரத மர் முன்வைக்கும் நாட்டுக்கு எதிரான கொள்கை கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு தொலைநோக்கு பார்வையை கேரளாவும் இடதுசாரிகளும் முன்வைக்க வேண்டும். கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு மற்றும்  மாநில மாநாட்டிற்குப் பிறகான நான்கு ஆண்டுகள், வலதுசாரி ஆக்கிரமிப்பு அரசியல் முன்னிலை பெற்றிருந்தது. பாசிச ஆர்எஸ்எஸ்-ஆல் வழிநடத்தப்படும் பாஜக, நாட்டை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது. ஒரு புறம், தாராளமயமாக்கல் கொள்கை வலு வடைகிறது. மறுபுறம் தேசிய சொத்துக்கள் சூறை யாடப்படுகின்றன. அதிகார அத்துமீறல் போக்கு  எல்லா நிலைகளிலும் பரவுகிறது. குடிமை உரிமை கள் பறிக்கப்படுகின்றன. ஜனநாயகம் பறிக்கப்படு கிறது. இதுதான் அரசியல் அனுபவம்.

2019-இல் ஒன்றிய அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போதிருந்து, அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளைத் தகர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்தை இல்லாமல் செய்தது, 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது ஆகியவை இதன்  ஒரு பகுதியாகும். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மதத்திற்கும் குடியுரிமைக்கும் இடையிலான தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து முற்றிலும் விலகியதாகும். நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையின் சுதந்திர மான தன்மையை மாற்ற அரசாங்கம் முயற்சிக் கிறது. தேர்தல் ஆணையமும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட நாட்டின் புலனாய்வு அமைப்புகளும் பாஜக-வின் அரசியல் கருவி களாக மாறி, அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பரப்புவதற்கு தலைமை வகிக்கவும் முயல்கின்றன. 

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் பரவலாக இருந்தது மற்றொரு சிறப்பு அம்சமாகும். ஒரு கையில் அரசியல் சாசனம், மறு கையில் தேசியக் கொடி என, இந்த அரசியல் சட்டத்தை காப்போம் என உரத்த குரலில் அறிவித்த இளைஞர்கள், போராட்டத்தை தொடர்ந்தனர். நமது நாட்டை அமெரிக்கப் பேரரசின் இளைய பங்காளியாக மாற்றுவதற்கான தமது முயற்சிகளை மோடி அரசு வலுப்படுத்தி வருகிறது.  அமெரிக்க சூழ்ச்சியின் ஒரு பகுதி யாக உருவாக்கப்பட்ட அனைத்து ஏகாதிபத்தியக் கூட்டணிகளிலும் இந்தியாவும் அங்கம் வகிக்கத் தயங்கவில்லை. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஆளும் வர்க்கம் தவறிவிட்டது. தேவையற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன. தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு தாராளமாக கிடைக்கவில்லை. தடுப்பூசியின் இந்த சமத்துவமின்மை தொற்றுநோயைப் பரப்புவதற்கான முக்கிய காரணியாக இருந்தது. நாட்டில் பஞ்சம் அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா வின் செல்வத்தில் 50 சதவிகிதம் நாட்டின் பெரும் பணக்காரர்கள் பத்து பேரிடம் சிக்கியுள்ளது. ஐம்பது சதவீத மக்கள் நாட்டின் செல்வத்தில் வெறும் 13 சதவிகிதத்தை வைத்துள்ளனர். சுரண்ட லை வலுப்படுத்தும் தீர்வுகள் வேலை யின்மையை உருவாக்குகின்றன - வறுமையை அதிகரிக்கின்றன.  இவ்வாறு யெச்சூரி கூறினார்.