tamilnadu

img

விவசாயத்தை பாழாக்கும் இறால் பண்ணைகள்: நாகை மாலி

சென்னை,ஏப்.27- தமிழக கடற்கரையோ ரங்களில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.  இதற்கு பதில் விளக்கம் அளித்த மீனவளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்,“தமிழக கடலோர  நிலப்பரப்பில் இறால் வளர்ப்பு  அதிகமாக மேற்கொள்ளப்ப டுகிறது. தற்போது 1,932 இறால் பண்ணைகள் 3836,33 ஹெக்டேர் பரப்பில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு பெற்றுதான் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியான 7.5 லட்சம் மெட்ரிக் டன்னில் 25,000 மெட்ரிக் டன் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. தற்போது வெள்ளை இறால் “பினேயஸ் வனாமி” அதிகமாக வளர்க்கப்படுகிறது” என்றார். இந்த தீர்மானத்தின் மீது  உரையாற்றிய வி.பி. நாகை  மாலி,“கடலூர், மயிலாதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், விழுப்பு ரம், செங்கற்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் ஏராளமான இறால் பண்ணைகள் புற்றீசல்போல் முளைத்து வரு வது பெரும் சவாலாக உள்ளது. இந்த பண்ணைகளால் நிலத் தடி நீர், விவசாயம் மிகவும் பாதிக்க ப்பட்டிருக்கிறது. 

இறால் பண்ணைகளால் உரு வாகிய 5 முதல் 6 பள்ளங்கள் மழை-வெள்ளத்தின்போது டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி நிலத்தடி நீரும், சாகுபடியும் பாதிக்கிறது. எனவே, இந்த பிரச்சனை குறித்து எஸ். ஜெக நாதன் சென்னை உயர்நீதிமன்ற த்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கையொட்டி, மாநில அரசுக்கு ஒன்றிய அரசு ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தர விட்டது. அந்தக் குழு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த குழு  செயல்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது.  ஏன் என்றால், இறால் பண்ணை அமைத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமா? அல்லது உரிமம் வாங்கியிருக்கிறார்களா? என்பதையெல்லாம் ஆய்வு செய்யாமல் யார் கேட்டாலும் இறால் பண்ணைகளை அமைக்க நமது அதிகாரிகள் அனுமதி கொடுத்துவிடுகிறார்கள்.  இதுபோன்ற இறால் பண்ணை கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதால் உலக நாடுகள் பலதும் கைவிட் டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அனுமதிப்பது சரியல்ல. இனியும் அனுமதிக்கக்கூடாது என்றும்  கோரிக்கைவிடுத்தார். இதற்கு பதில் அளித்த அமைச் சர்,“இறால் பண்ணைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படை யில், நீடித்த மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த இறால் வளர்ப் பினை மேற்கொள்ளவும் கடலோர மாநிலங்களில் இறால்  பண்ணைகளை கண்காணிக்க வும் ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கடலோர நீர்வாழ் உயிரன ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்தது.

இறால் பண்ணைகளை பதிவு செய்வதற்கான செயல்முறைகள் இதன் மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. புதுப்பிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில்  குழு மற்றும் மீன் வளம்,  கால்நடை துறை செயலாளர்கள்  தலைமையில் மாநில அளவி லான குழுவும் அமைக்கப்பட்டுள் ளது” என்றார். தற்போது 2,989 இறால் பண்ணைகளுக்கு உரிமம் கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர  மாவட்டங்களில் அனுமதியின்றி இயங்கி வந்த இறால் பண்ணைக ளுக்கு முறைப்படி எச்சரிக்கை செய்து இறால் வளர்ப்பு பணி கள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய நாகை மாலி,“ இறால் பண்ணைகள் சட்டப்பூர்வமாக இயங்கி வருகி றது என்று அமைச்சர் கூறுகி றார். ஆனால்,அது உண்மைக்கு மாறானது. காரணம், நாகை மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சுற்றி இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த கிராமம் முற்றி லும் அழியக்கூடிய நிலை ஏற்பட்டி ருக்கிறது. ஆகவே, அமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலாமாக அறிவித்துவிட்டு, இறால் பண்ணைகளை அமைத்து வருவதால் நிலத்தடி நீர், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுவது பசுமை மண்டலத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். ஆகவே, சட்டமன்ற உறுப்பி னர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளடக்கிய ஒரு  குழு அமைத்து இறால் பண்ணை கள் சட்டப்பூர்வமாக இயங்கு கிறதா? என்பதை ஆய்வு செய்ய  வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர்,“துறையின் அதி காரிகளை கொண்டும் உறுப்பினர்  கூறியபடியும் ஒரு குழு அமைத்து,  ஒவ்வொரு இறால் பண்ணை யும் ஆய்வு செய்து தவறு  நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் பொருளா தாரத்தில் இறால் வளர்ப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோர மக்களுக்கு வாழ்வாதார மும் கிடைக்கிறது. ஆகவே, பாதிப்பு ஏற்படாமல் இறால் வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படும்” என்றார்.