பூப்பூத்துக் குலுங்குதடிக் கண்ணே; --வாடிப்
பூங்காவில் மகிழ்ந்திருப்போம் பெண்ணே!
வாய்ப்பிதுபோல் வருமோடி கண்ணே? --வாடி
மனமகிழ்ந்து பார்த்திருப்போம் பெண்ணே!!
போய்க்கண்டு மகிழ்ந்திடுவோம் பெண்ணே? -அதைப்
போற்றவேண்டும் பறித்திடாதே கண்ணே!
கைப்பிடித்துக் கெஞ்சுகின்றேன் உன்னை; ---மலர்கள்
காம்பகற்ற கூடாதடி பெண்ணே!
ஏனிப்படிச் சொல்லுகின்றாய் கண்ணே--- பறித்தால்
எழில்கூடும் நம்தலைக்குப் பெண்ணே!
தேனெப்படி சுவைத்தருந்தும் வண்டு? ; - வந்து
திகைக்காதோ இல்லையெனக் கண்டு!
இப்படியாய் எண்ணுவதும் தவறே ;---உழவன்
ஏற்றம்பெற மலர்வதும்தான் மலரே!
எப்படியும் வீணாகிப் போகும்-மலர்
எடுத்தால்தான் அதன்பயனுக் காகும்!
பூங்காவில் பூத்திருக்கும் மலர்கள்-அவை
புன்னகைத்து மகிழ்விக்கும் கலைகள்!
ஓங்குகின்ற விவசாய மலர்கள்-அவை
உழவனுக்கு வாழ்க்கைதரும் விலைகள்!