மணிப்பூர் பழங்குடி பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாஜக அரசுகளை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் வீ.ரகுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மூத்தத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏழுமலை, எம்.ஆறுமுகம், பி.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.