tamilnadu

பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை,மார்ச் 2- சென்னையை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி தன்னுடைய தோழிகளுடன் கடந்த  2018 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற் கரைக்குச் சென்றார். அங்கு மாணவிகள் குதிரை சவாரி செய்தனர். அப்போது 27 வயதான குதிரை ஓட்டி, 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலி புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த குதிரை ஓட்டியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், அந்த 27 வயது  வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு  வழங்கியது.