போக்குவரத்து கழகங்களுக்கான வித்தியாசத் தொகையை ஒதுக்கிடுக!
துறைச் செயலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்
அரசாணைப்படி போக்கு வரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை நிதிநிலை அறிக்கை யில் ஒதுக்கி வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலி யுறுத்தி உள்ளன. இது தொடர்பாக சிஐடியு, ஏஐடி யுசி, டிடிஎஸ்எப் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிதித்துறை செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழக மக்களுக்கு குறைந்த கட்ட ணத்தில் சேவை அளிப்பதுடன், பயணத் தேவையைப் பூர்த்தி செய் யும் சேவைத்துறையாக உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்க ளில் எவ்வித லாப நோக்கமின்றி பேருந்துகளை இயக்கி வரு கின்றன. கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடுகட்டப்படாததால், புதிய பேருந்துகளை மாற்றுவது, மேம் படுத்துவது போன்றவை பாதிக்கப் பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங் களுக்கு ஏற்படும் நிதி பற்றாக் குறையை சமாளிக்க ஊழியர் களின் வருங்கால வைப்புநிதி சேமிப்பு, பணிக்கொடை நம்பகத் திற்கு செலுத்த வேண்டிய பணம் போன்றவை செலுத்தப் படவில்லை. இவ்வாறாக தொழிலாளர்களின் பணம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய் யப்பட்டுள்ளது. இதனால் தொழி லாளர்களுக்கு ஓய்வுகால பலன்கள் உரிய காலத்தில் வழங்கப்படு வதில்லை. எனவே, கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு முழுமை யாக ஈடுகட்ட வேண்டும் என தொ டர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை பரிசீலித்த அரசு, கழகங்க ளின் இழப்பை ஈடுகட்டுவது சம்பந்த மாக ஆய்வு செய்ய குழு அமைத் தது. அந்தக்குழு தனது பரிந்துரை களையும் அரசுக்கு அளித்துள்ளது.
இதனையடுத்து அரசாணை யில் 2022ஆம் ஆண்டு முதல் பற் றாக்குறையை ஈடுகட்ட வேண் டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அரசாணை அடிப்படையில் கழகங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறைக்கு நிதி வழங்கப்படவில்லை. 2025-26க்கான நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் அரசாணை அடிப்படை யில் வித்தியாசத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.