tamilnadu

img

சைபர் குற்றங்களை விசாரிக்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவு

சென்னை, ஜூன் 2- சைபர் குற்றம் தொடர் பாக வரும் புகார்களுக்கு உடனடியாக சமூக பதிவு  சான்று வழங்க வேண்டும்  என தமிழ்நாடு காவல்துறை  தலைமை இயக்குநர் சைலே ந்திரபாபு தெரிவித்துள்ளார். சைபர் குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்திடும்  வகையிலும், சைபர் குற்றத் தினால் ஏற்படும் பண இழப்பை முற்றிலும் தடுக் கும் வகையிலும், சைபர்  குற்றத்தினால் பாதிக்கப்பட்ட வர்கள் புகார் அளிக்க ஏற் படும் தாமதத்தை தவிர்த் திடும் வகையிலும் அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களை மட்டும் விசாரிக்க தனிப்பிரிவு தொடங்கும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையத்தில் இந்த தனிப்பிரிவுக்கு ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு முதல் நிலை காவலர், ஒரு வரவேற் பாளர் தனியாக நியமிக்க  வேண்டும் எனவும் சைலேந்தி ரபாபு அறிவுறுத்தியுள்ளார். இந்த தனிப்பிரிவுக்கு நியமிக் கப்படும் காவலர் சைபர்  குற்றங்கள் தொடர்பான விழி ப்புணர்வு பெற்றவராகவும், அந்த குற்றங்களை கையாள தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். சைபர் குற்றத்தில் பணம்  மோசடி குறித்து வரும் புகார் களை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் சைபர் குற்றப்பிரிவின் தலைமை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பண மோசடி தவிர்த்து பிற  சைபர் குற்றங்கள் தொடர் பாக வரும் புகார்களை தேசிய சைபர் குற்றப்பிரிவு தகவல் மையத்துக்கு அனுப்பி உதவி பெறலாம். சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார்க ளுக்கு உடனடியாக சமூக பதிவு சான்று (சி.எஸ்.ஆர்)  வழங்க வேண்டும் எனவும்  சைலேந்திரபாபு தெரிவித் துள்ளார். சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படை யில் இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.