மதுரை, மார்ச் 5- ஸ்டேட் வங்கியின் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் மகளிருக்கு தனிக்கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 2022 ஜனவரி 25 அன்று நான் ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு மகளிர் ஊழியர்களுக்கு எல்லா ஸ்டேட் வங்கி அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறை உறுதி செய்யப்பட வேண்டும் என கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு ஸ்டேட் வங்கி மைய அலுவல கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியின் மனித உறவுகள் மற்றும் நிறுவன மேம்பாட்டு துணை மேலாண்மை இயக்குனர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் (PRM/RS/2021-22/587), “2018 லேயே மகளிர் தனிக் கழிப் பறை அமைத்திட வலியுறுத்தி சுற்றறிக்கை விடுத்துள்ளோம்; எனினும் உங்களின் கடிதம் கிடைத்தவுடன் எங்கள் எல்லா வட்டார அலுவலகங்களுக்கும் மகளிர் கழிப்பறைகளை எல்லா கிளைகள்/ அலுவலகங்களிலும் உறுதி செய்திட வேண்டுமென மீண்டும் அறிவுறுத்தல்களைத் தந்துள்ளோம். தற்போது தனிக் கழிப்பறை மகளிருக்கு இல்லாத அலுவலகங்களில் உடனே அமைத்திட கட்டிட உரிமையாளர்களிடம் பேசு மாறும், கட்டிட உரிமையாளர்கள் இயலா தென கூறினால் மாற்று ஏற்பாடுகளை செய்யு மாறும் அறிவுறுத்தியுள்ளோம்.”
ஸ்டேட் வங்கியின் பதிலுக்கு நன்றி
இப் பிரச்சனையை எனது கவனத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அதன் மகளிர் துணைக் குழு கொண்டு வந்திருந்தது. ஸ்டேட் வங்கி மைய அலுவலக வழிகாட்டல் உடனடியாக வட்டார அலுவல கங்களால் அமலாக்கப்படும் என நம்பு கிறேன். பாலின நிகர் நிலை, பெண்களின் பிரத்தியேக கோரிக்கைகளில் ஒரு நேர் மறை நகர்வு இது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.