tamilnadu

img

மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தமுஎகச மூத்த தலைவர் தெ.சுந்தர மகாலிங்கம் உடல் தானம்

மதுரை,செப்.01- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தெ.சுந்தர மகாலிங்கம் (வயது 83) அவர்கள் ஆகஸ்ட் 30 அன்று காலமானார். தோழர் தெ.சுந்தரமகாலிங்கம் அவர்களின் உடல்தான நிகழ்வு செப்டம்பர் 1 வியாழனன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமுஎகச மதிப்புறு தலைவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன், தமுஎகச துணைப் பொதுச் செயலா ளர்கள் அ.இலட்சுமிகாந்தன், வெண்புறா, மாநிலக்குழு உறுப்பினர்கள் சு.நித்தியா னந்தம், அ.ந.சாந்தாராம், விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர் நா.ஜெகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மல்லி கே.கருப் பையா, வத்திராயிருப்பு மக்கள் மருத்துவர் பால்ச்சாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.நீதிராஜா, சுந்தர மகாலிங்கம் புதல்வர்கள் தெ.சு.கோபிநாத், தெ.சு.கவுதமன் மற்றும் உறவினர்கள், தோழர்கள் பங்கேற்றனர்.

சு.வெங்கேசன் எம்.பி. புகழஞ்சலி

மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்னவேல், சுந்தரமகாலிங்கத்தின் உடலைப் பெற்றுக் கொண்டு, அவர்களது புதல்வர்களிடம் சான்றிதழை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்க டேசன் எம்.பி., பேசுகையில், தோழர் சுந்தர மகாலிங்கம் இறப்பதற்கு முன் உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் தான் இறந்தால் எந்தவித சடங்கு சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது. சாதிய சடங்குகள் செய்யக் கூடாது என்று அவற்றை மறுத்து மனிதனாக நான் இறக்கின்றேன். எனவே என்னுடைய உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார். எனவே அந்த அடிப்படையில் அவருடைய புதல்வர்கள் மற்றும் தோழர்கள் முன்னி லையில் அவருடைய உடலை இரண்டு தினங் களுக்கு முன் அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து முறைப்படி இன்று மருத் துவக் கல்லூரி முதல்வரிடம் அவருடைய பூத உடலை வழங்கியுள்ளோம். மனித சமூகத்தில் அளப்பரிய பணியினை செய்த தோழர் சுந்தர மகாலிங்கம் அவர்கள் உடல் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் அறிவியல் படிப்புக்கு மற்றும் ஆராய்ச் சிக்காக வழங்கப்பட்டுள்ளது, அந்த வகையில் அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துகின்றோம் என்று கூறினார்.