தஞ்சாவூர், மார்ச் 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சோ.சுத்தானந்தம் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் தஞ்சாவூர், சரோஜ் நினைவகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கோ.நீலமேகம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப் பினரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம் படத்தை திறந்து வைத்துப் பேசினார். முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் புகழஞ்சலி உரையாற்றினார்.
மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனி வாசன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெய பால், பி.செந்தில்குமார், என்.வி. கண்ணன், தமுஎகச மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி, ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் சே.செல்வராஜ், லிகாய் மாநில செயல் தலைவர் எம். பூவலிங்கம், லிகாய் மாநிலச் செய லாளர் நி.இராஜா, லிகாய் கோட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், தீக்கதிர் வீரமணி, தலைமையாசிரியர் சந்திரமௌலி, மாவட்டக்குழு உறுப் பினர்கள், புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கண்ணம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப் பினர் என்.சிவகுரு நன்றி கூறினார். தோழர் சோ.சுத்தானந்தத்தின் மகள்கள் ஹேமா, பூமா மற்றும் அவரது தம்பி மகன் சுந்தர பிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.