tamilnadu

img

மூத்த தோழர் ஏ.கோதண்டம் மகன் மறைவு: சிபிஎம் இரங்கல்

விழுப்புரம்,நவ.1- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர்களின் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருமான ஏ.கோதண்டத்தின் இளைய மகன் கோ. அசோக் குமார்  அக்டோபர் 31 ஆம் தேதி அதிகாலையில் காலமானார். நோய்வாய்ப்பட்டிருந்த அசோக் குமார் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 41. திருமணமான அசோக்குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திண்டிவனம் காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அசோக் குமார் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள், பல்வேறு சங்க தலைவர்கள் உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன்,அவரது உடலுக்கு மாலையணிவித்து, அசோக் குமாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்தார். இன்று தகனம்  : இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. சலவாதி ரோட்டில் உள்ள நகராட்சி மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.