கடலும் கடற்கரையும் மீனவர்களுக்கே சொந்தம்
கடலும் கடற்கரையும் மீனவர்க ளுக்கே சொந்தம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் பெ.சண்முகம் கூறினார். காவல்துறையில் ஏதோ கோளாறு நடக்கிறது. அதிகாரிகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். நீலக்கொடி திட்ட எதிர்ப்பு மற்றும் சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 165 வது பிறந்த தின பொதுக்கூட்டம் செவ் வாயன்று (பிப்.18) கிருஷ்ணாம் பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மயிலாப்பூர் பகுதிக்குழு சார்பில் அளிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் அகில இந்திய மாநாட்டு நிதியை பெற்றுக் கொண்டு பெ.சண்முகம் பேசியதன் சுருக்கம் வருமாறு: இயற்கை பேரிடர் நிதி என்று ஒன்றிய அரசு உருவாக்கி வைத்தி ருந்தாலும், தமிழகத்திற்கு, கேரளா விற்கு தருவதில்லை. நூறுநாள் வேலைத்திட்டத்தில் தமிழகத்திற்கு மட்டும் ஒன்றிய அரசு 1107 கோடி ரூபாய் கூலி பாக்கி வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கெதிராக உறுதியான வலுமிக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். காடு ஆதிவாசி மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வன உரிமைச் சட்டம்-2006 கூறுகிறது. அதேபோன்று கடலும், கடற்கரையும் மீனவர்களுக்கு மட்டுமே சொந்தம். கடலில் இருந்து அவர்களை பிரிக்கவே முடியாது. கடற்கரைக்கு அழகே மீனவர்களும், கட்டுமரங்களும், வலைகளும்தான். சுற்றுலா வருகிறவர்களுக்கு தேவை யான வசதிகளை கடற்கரைக்கு அப்பால் செய்துதரலாம். கடற்கரை, நகரை அழகுபடுத்துதல் என்ற பெயரில் மீனவர்களின் வாழ்வாதா ரத்தை அழித்து செயல்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க மாட்டோம். அத்தகைய திட்டங்களை உடனடி யாக கைவிட வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருகிறது.அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் மாணவர், மாதர் அமைப்புகள் போரா டிய பிறகே காவல்துறை குற்றவா ளியை கைது செய்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்துக் கொண்டு, சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி)வை அமைத்தது. தொழில்நுட்பக் கோளா றால் எப்ஐஆர் வெளியானது என்று மத்திய தகவல் முகமையே ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், எஸ்ஐடி, எப்ஐஆர் வெளியானதை முன்னிலைப்படுத்தி, பத்திரிகை யாளர்களின் செல்போன்களை பறித்து, அவரது குடும்பத்தினரை துன்புறுத்தியது. நீதிமன்றம் தலை யிடாவிடில் இன்னும் பலர் பாதிக்கப் பட்டு இருப்பார்கள். இத்தகைய சூழலின் காரணமாக பாலியல் துன்பு றுத்தல் என்ற மூல வழக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் பேசுகை யில், “மீனவர்களின் தொழிலையும், குடியிருப்புகளையும், வாழ்வுரிமை யையும் பறிக்கும் வகையில் நீலக் கொடி திட்டம் கொண்டு வரப்படு கிறது. மீனவர்களின் எதிர்ப்பை ஒடுக்க; ஒற்றுமையை சிதைக்க ஆட்சியா ளர்கள் நினைக்கின்றனர். எனவே, மீனவ கிராமங்களில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் வெளியாட் களை குடியேற்றுகின்றனர். இவற்றை எதிர்த்து அனைவரையும் ஒருங்கி ணைத்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும்” என்றார். இந்தக் கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயசங்க ரன், எம்.சரஸ்வதி எம்.சி., பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.விஜயா, ஜெ.அன்புரோஸ், எஸ்.பாலகிருஷ் ணன், ரோட்டரி நகர் கிளைச் செயலா ளர் கே.விநாயகம் ஆகியோர் பேசி னர்.