உலக பட்டினி குறி யீட்டில் இந்தியா 111ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் வரும்போது அவ மானத்தை மறைக்க மோடி அரசு தேசிய தலை நகரின் சேரிகளை மறைக்கிறது. பட்டினி அகற்றும் வழி இதுவல்ல. நாட்டின் கழுத்தை நெரிப்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கை. பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகளாவிய பசி குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு கீழே இந்தியா உள்ளது. கடந்த ஆண்டை விட நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது. நாட்டைப் பட்டினியில் .இருந்து அகற்ற ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இடதுசாரிகள் முயற்சி எடுத்தனர். இந்த திட்டத்தை பாஜக அரசு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது. கடந்த தேசிய குடும்ப சுகாதார ஆய்வில், நாட்டில் 57 சதவிகிதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப் பட்டுள்ளது தெரியவந்தது. இந்த உண்மையை மறைக்க, இரத்த சோகையைக் கண்டறிய புதிய கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று பாஜக அரசு முடிவு செய்தது. ஒன்றிய அரசின் திட்டங்களில் ஊழல் நடந்திருப்பது சிஏஜி அறிக்கையில் வந்த போது, தணிக்கைப் பணிகளை நிறுத்த உத்தர விடப்பட்டது. இதுதான் ஒன்றிய அரசின் நிலைப்பாடு. இப்போது ஒளிரும் கேரளத்தின் வெளிச்சத்தை அணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அனைத்து முன்னேற்றங்களையும் தடுக்க வேண்டும் என்பது நோக்கம். இதற்காக நிதி ரீதியான நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசு, கேரளத்தை விரோத மனப்பான்மையுடன் நடத்துகிறது. அனைத்து நெருக்கடிகளையும் கடந்து கேரளம் முன்னேறி வருகிறது. அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். கண்ணூரில் நடந்த கேரள அரசு செவிலியர்கள் சங்கத்தின் (கேஜிஎன்ஏ) 66 ஆவது மாநில மாநாட்டில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.கே.சைலஜா ஆற்றிய உரையின் பகுதிகள்