tamilnadu

img

ஸ்காட் பாலிடெக்னிக் மாணவர்கள் 507 பேருக்கு பணி நியமன ஆணை

திருநெல்வேலி, ஏப்.17-ஸ்காட் பாலிடெக்னிக் மாணவர்கள் 507 பேருக்கு பணி நியமன ஆணையை ஸ்காட் குழுமத் தலைவர் எஸ்.கிளிட்டஸ்பாபு வழங்கினார்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஸ்காட் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.இங்கு ஸ்காட் பாலிடெக்னிக்கில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 507 பேருக்கு பணி நியமனம் வழங்கும் விழா இங்குள்ளகல்லூரி கலையரங்கில் திங்களன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்காட் குழுமத் தலைவர் எஸ்.கிளிட்டஸ்பாபு 22 வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் தேர்வான 507 மாணவ - மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.இவ்விழாவில் ஸ்காட் பாலிடெக்னிக் மாணவர்கள் மட்டுமின்றி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 100சதவீத பணி நியமன ஆணைகளை ஸ்காட் பாலிடெக்னிக் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.விழாவில் ஸ்காட் குழுமநிர்வாக இயக்குநர் அருண்பாபு, பொது மேலாளர் ஜெயக்குமார், துணை மேலாளரும் கல்லூரி முதல்வருமான மணிமாறன், துணைமுதல்வர் சகாய ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

;