சென்னை, ஜன. 31 - தமிழகம் முழுவதும் கொரோ னா ஊரடங்கிற்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 (இன்று) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதையொட்டி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கல்லூரிகளில் வருகைப்பதிவு, தேர்வுக்கான விண்ணப்பம் போன்ற காரணங்களை கூறி மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்காமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு தற்போது அனைத்து மாணவர்களுக்குமான வகுப்புகளை நேரடியாக துவங்கி யுள்ளதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் கல்லூரி மாணவர்களுக் கான தேர்வு மட்டும் இணைய தளத்தில் நடைபெறும் என அறி வித்துள்ளது. பெருந் தொற்றுச் சூழலில் இந்தப் பருவம் (செமஸ்டர்) மூன்று விதமான முறையில் நடந்துள்ளது. முதலில் ஆன்லைன் வகுப்பு மட்டும் ஓரு மாதமும். அடு்த்த இரண்டு மாதங்கள் ஒரு நாள் நேரடி வகுப்பும, அடுத்த நாள் ஆன்லைன் வகுப்பு என இருவகையிலும் நடந்தது. இறுதியாக ஒரு மாதம் மட்டும் நேரடி வகுப்பாக நடந்தது. அதுவும் ஜனவரி 5 ஒமைக்ரான் பர வல் பிரச்சனையால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் சிலருக்கு ஆன்லைன் உள்ளிட்ட வகுப்புகளில் போதிய வருகைப் பதிவு இல்லாத நிலை ஏற்பட்டுள் ளது.
மேலும் சிலர் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியாமலும் இருந்துள்ளார்கள். எனவே, வருகைப் பதிவு குறைவு, தேர்வுக் கட்டணம் போன்ற காரணங்களை கூறி மாணவர்களை தேர்வ எழுத அனுமதிக்காமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஒரளவு வகுப்புகள் மற்றும் மாண வர்களின் கல்வி மீதான ஆர்வத்தின் அடிப்படையில் மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கவேண் டும். தமிழக அரசும், உயர் கல்வி துறையும் இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளுக்கு உத்தர விட வேண்டும்.