கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பழைய காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெரியசாமி- பரிமளா தம்பதி.இவர்களின் 3 ஆவது மகன் வினோத் (14), அங்குள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24 ஆம் தேதியன்று இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். . இந்த துயரமான நிலையிலும் மகனின் உடலை தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்தனர். தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் உத்தரவின்பேரில், சென்னை, கோவை, மதுரையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், மூளைச்சாவு அடைந்துவிட்ட வினோத்தின் உடலில் இருந்து, இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றை, பிறருக்கு பொருத்துவதற்காக அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். சேலம் அரசு மருத்துவமனையில், மாணவர் வினோத்தின் உடலுக்கு, மருத்துவமனை டீன் மணி மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.