சவூதி அரேபியப் படைகள் தொடர்ந்து ஏமன் பகுதிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குழந்தை கள் உள்ளிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்நிலையில் பதிலடியாக பல சவூதி அரேபிய நகரங்க ளைக் குறிவைத்து ஏமன் பாதுகாப்புப் படையினர் தாக்கு தல் நடத்தியுள்ளனர். ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா பறக்கும் கருவிகளைக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. உயிர் மற்றும் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் வேலையின்மை கடந்த காலாண்டை விடக் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அர்ஜெண்டி னாவின் வேலையின்மை விகிதம் 8.2 விழுக்காடாக இருந்தது. கடந்த காலாண்டை விட 1.4 விழுக்காடு குறைந்துள்ளது. 11 லட்சம் பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியிருக்கிறது.
தொடர்ந்து விலையேறிக் கொண்டிருந்ததால், அதைக் கட்டுப்படுத்த சில அரசு நடவடிக்கை களை ரெசிப் தய்யிப் எர்டோகன் தலைமையிலான துருக்கி அரசு எடுத்துள்ளது. தேசிய பணமான லிராவின் மதிப்பு கடுமை யான ஏற்றத் தாழ்வுகளைக் கடந்த சில நாட்களாக கண்டு வந்தது. இதனால் பொருளாதாரமும், சேமிப்பும் பாதிக்கும் அபாயம் எழுந்தது. சேமிப்புகளுக்கு அரசு உத்தரவாதம் தரும் என்று தொலைக்காட்சியில் மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் தெரிவித்ததால், சாதகமான விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.