சென்னை, அக். 10 - சாம்சங் தொழிலாளர்கள் 32-ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில், அவர்களில் 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, வழக்கம்போல காவல்துறை அடக்குமுறைப் போக்கை கடைப்பிடித்தது. இந்நிலையில், கைது படலத்திற்கு இடையேயும், ‘சாம்சங் தொழி லாளர்கள் போராட்டம் தொடரும்’ என்று சிஐடியு தலைவர்கள் அறிவித்துள்ளனர். புதனன்று “தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை” என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. சுங்குவார் சத்திரம் வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்களும், ‘சாம்சங்’ தொழிலாளர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்றனர். அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்றார். இதனால், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது குறித்து அரசு மற்றும் தொழிலாளர் நலத்துறையும் அறி விப்பு வெளியிடும் என்று தொழி லாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மீண்டும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அக். 10 அன்று தொழிலாளர்கள் 32-ஆவது நாளாக அமைதியான முறையில் தங்களது போராட்டத்தை தொடர்வதற்கு வந்தனர். ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று (தனியாருக்கு சொந்தமான வேறு ஒரு இடத்தில்) தொழிலாளர் களை ஒன்று கூட விடாமல்மிரட்டினர்.
தலைவர்கள் கைது
காவல்துறையின் அடக்குமுறை களையும் மீறி தொழிலாளர்கள் பந்தல் அமைக்க முயன்றபோது, அதனைத் தடுத்து, 30 தொழிலாளர்களையும்- இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன், இ. முத்துக்குமார் ஆகியோரை யும் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அவர்களை எங்கு வைக்கப் பட்டுள்ளனர் என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தினர். வழக்கறிஞர்கள், கட்சித் தலை வர்கள் மற்றும் சிஐடியு தலைவர்கள் உள்ளிட்ட எவரையும் சுங்குவார்சத்தி ரம் காவல் நிலையத்தில் அனுமதிக்க வில்லை. மேலும், செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தினர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
2 தொழிலாளர்களுக்கு ஜாமீன்
இதற்கிடையில், ஏற்கெனவே வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட எலன், சூரியபிரகாஷ் ஆகிய இரு தொழிலாளர்களுக்கும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தொழிலாளர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, பிரதாபன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இந்த கைது மற்றும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, மாலை 6.30 மணிக்கு இரு தொழிலாளர்களையும் ஜாமீனில் விடு தலை செய்ய உத்தரவு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே தடுப்புக் காவலில் கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர். வெளியில் வந்த சங்கத் தலைவர்கள், ‘சாம்சங் தொழி லாளர்கள் போராட்டம் தொடரும்’ என்று அறிவித்தனர். முன்னதாக, போராட்டம் நடத்தி வரும் தொழி லாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், சோம சுந்தரம், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்த னர்.