அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் சங்கரய்யா: முதலமைச்சர் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பொதுவுடைமை இயக்கத்தின் முது பெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ திரு. சங்க ரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சி யங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!” என குறிப்பிட்டுள்ளார்.
கி.வீரமணி
“முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் இன்று (சனிக்கிழமை) 102ஆவது ஆண்டு பிறந்த நாளில், கொள்கை வீரரான அவர் மேலும் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ திராவிடர் கழகம் தனது வாழ்த்து களைத் தெரிவித்து மகிழுகிறது” என்று கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை 15- விடுதலைப் போராட்ட வீரரும், தகைசால் தமிழருமான தோழர் என். சங்கரய்யா சனிக்கிழமையன்று (ஜூலை 15) தனது 102வது பிறந்த நாளை வீட்டில் எளிமையாக கொண் டாடினார். இதனையொட்டி குரோம் பேட்டையில் உள்ள அவரது இல்லத் திற்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம், மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.செல்வசிங், என்.குண சேகரன், எஸ்.கண்ணன் உள்ளிட் டோர் சந்தன மாலை அணிவித்து, பழக்கூடை கொடுத்து, ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பர சன், தாம்பரம் மாநகர மேயர் வசந்த குமாரி, துணை மேயர் காமராஜ், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மதிமுக மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன், சிஐடியு மாநில பொதுச்செயலா ளர் ஜி.சுகுமாறன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி. செல்வா (மத்தியசென்னை), மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ப. சுந்தர்ராஜன், பி.ஜான்சிராணி, ஏ.ஆறு முக நயினார், வெ.ராஜசேகரன்,
ஆர்.நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தோழர் ஆர்.நல்ல கண்ணு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்,திருமாவள வன், மார்க்சிஸ்ட்க ட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்க டேசன் உள்ளிடோர் அலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். பாலர் பூங்கா அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்வில் என்.சங்க ரய்யா கேக் வெட்டியபோது குழந்தை கள் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களி டம் கூறுகையில், “இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முது பெரும் தலைவராக தோழர் என்.சங்க ரய்யா உள்ளார். 1964 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் 7வது மாநாட்டில் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் மத்தியக்குழு உறுப்பி னர்களில் இரண்டு பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அதில், ஒருவர் என்.சங்கரய்யா. மற்றொரு வர் கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன். தோழர் சங்கரய்யா, கல்லூரி நாட் களிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத் தில் இணைந்து அந்நியர் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். அப்போது எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று கேட்டபோது, “நாட்டு விடுதலை, விடுதலைக்காக போராடுவதுதான் என்னுடைய உந்து சக்தி” என்றார். விடுதலைக்கு பிறகு நாட்டின் மக் கள் நலனுக்காக, மனித உரிமை களுக்காக போராடினார். விடுத லைக்கு முன்பு 4 ஆண்டுகளும், விடு தலைக்கு பிறகு 4 ஆண்டுகளும் சிறை யில் இருந்தார். 3 ஆண்டுகள் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அரசி யலில் நேர்மை, மக்கள் நலனுக் காக போரடுகிறவர்களுக்கு அடையாள மாக தோழர் என்.சங்கரய்யா திகழ் கிறார். அவரின் லட்சியத்தை முன் னெடுக்க உறுதியேற்கிறோம்” என்று கூறினார்.
கே.பாலகிருஷ்ணன்
கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியா ளர் களிடம் பேசுகையில், “என்.சங்க ரய்யாவின் பிறந்த நாளை கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கொண் டாடுகிறோம். பெருமைமிக்க விடு தலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்; தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். சகல பகுதி மக்களின் உரிமைக்காக போராடி யவர். சட்டமன்றத்தில் உழைப்பாளி மக்களின் குரலாக திகழ்ந்தவர். தமிழ்மொழி, தமிழ் இலக்கி யங்களை பாதுகாக்க, தமிழ் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாக வும் தமிழை மாற்ற சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என பல்வேறு தளங்களில் பணியாற்றி போராடிய மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா. அப்பழுக்கற்ற வாழ்வுக்கு சொந்தக்காரர். எளிமைக்கு அடை யாளமாக திகழ்பவர். நேர்மையான அரசியலின் முகமாக இருப்பவர் தோழர் என்.சங்கரய்யா. அவரது லட்சியங்களை நிறைவேற்று வதற்கு, அவரின் கொள்கை பய ணத்தை மேற்கொண்டு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியையும், மக்கள் இயக்கங்களையும் பலப்படுத்து வோம்” என்றார். “தமிழக அரசு சார்பில், முதல மைச்சர், என்.சங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கி னார். இதன்மூலம், தமிழக அரசியல் வரலாற்றில் என்.சங்கரய்யாவின் மகத்தான பங்களிப்பு அனை வருக்கும் விளங்கும். நேர்மையான அரசியலை, மக்கள் இயக்கங்களை முன்னெடுக்க, பல்வேறு கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பட்டி யலின மக்கள், பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாகும் பெண்கள், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு இந்நாளில் உறுதியேற்கிறோம்” என்றார்.