tamilnadu

img

பாபநாசத்தில் சலங்கை நாதம் - நடன நிகழ்ச்சி

பாபநாசத்தில் சலங்கை நாதம் - நடன நிகழ்ச்சி

பாபநாசம், மே 18-  தென்னக பண்பாட்டு மையம் தஞ்சாவூர், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட், பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து சலங்கை நாதம் - நடன நிகழ்ச்சியை நடத்தின.  பாபநாசம் வித்யா பாட சாலை வளாகத்தில் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் நடன நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக நிகழ்ச்சியை சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் மாவட்ட சட்ட பணிகள் ஆணையம், காரைக்கால், புதுச்சேரி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.  இதில், பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், ஓய்வு இணை இயக்குநர் கலை பண்பாட்டுத்துறை குணசேகரன், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சம்பந்தம், முத்தமிழ்ச் செல்வம், பிரபாகரன், பாண்டியன், கணேசன், பன்னீர் செல்வம், வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் தில்லைநாயகி, திலகவதி உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.