tamilnadu

img

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்ற புகார் வந்தால் கடும் நடவடிக்கை

சென்னை,மே 5- கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரி வித்துள்ளது. இதுகுறித்து சென்னை யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்தி, மகாதேவன் அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவிந்திரன், மனு தாரர் குறிப்பிட்ட குமரி, திருப்பூர் சம்பவங்க ளைத் தவிர வேறு எந்த இடத்திலும் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக எந்த புகாரும் இல்லை.  கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.மேலும் எந்த பள்ளியில் எந்த தேதியில் மதமாற்றம் நடந்தது என்ற எந்தவொரு விவரங்கள் இல்லாமலும் இந்த மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இது விசார ணைக்கு உகந்ததல்ல. எனவே  வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண் டார். அப்போது குறுக் கிட்ட நீதிபதிகள், கட்டாய மதமாற்றத்தை தடுப்ப தற்கான வழிகாட்டு விதி முறைகளை அரசு ஏன் தொடங்கக்கூடாது. இதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று  கேள்வி எழுப்பினர். மேலும் குறிப் பிட்ட மதத்தை பின்பற்றுவது உரிமையாக இருந்தால் கூட, அது மதமாற்றம் செய் வது என்பது உரிமை அல்ல என்று தெரிவித்தனர்.பின்னர்  வழக்கு விசார ணையை வெள்ளிக் கிழ மைக்கு ஒத்திவைத்தனர்.