tamilnadu

சொத்து குவிப்பு : எஸ்.வி. வேலுமணி வீடு, உள்பட 58 இடங்களில் சோதனை

சென்னை,மார்ச் 15- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2-வது முறையாக சோதனையில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செய லாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த  குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குற்றம்  சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை  நடத்தினர். இதன்படி எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். '

முடிவில் 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த் தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய்  அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்    செவ்வா யன்று (மார்ச் 15) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தினர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவ னங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள னர்.   இதனையடுத்து எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதைப்போலவே கோவை சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராமன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மேலும் கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்க ளில் எஸ்.பி.வேலு மணிக்கு தொடர்புடைய இன்னும் பல நபர்க ளின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். கோவையில் 41 இடங்கள் (எஸ்.பி.வேலு மணி வீடு உட்பட), சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது. இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் சேர்த்து மேலும் 13 பேர் மீதும் இதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.