tamilnadu

img

வேளாண் மாணவிகளின் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு

வேளாண் மாணவிகளின்  கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு

தஞ்சாவூர், ஏப்.26-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் உள்ள செங்கமங்கலம் கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகளின் கிராம வேளாண் அனுபவத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடைபெற்றது. இதில், வண்ணப்பொடி பயன்படுத்தி சமூக வரைபடம், வளங்கள் தரவரிசை, கல்வி விகிதம், தினசரி செயல் நேரம், பிரச்சனை மரம் போன்றவற்றை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் வரைந்து காட்டினர். இந்நிகழ்வில், வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், கூட்டாக கிராம மக்களுக்கு கிராமப்புற மதிப்பீடு பற்றி விளக்கிக் கூறினர்.