திருவனந்தபுரம், மார்ச் 7- கேரளத்தின் அடூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலை வரை கொலை செய்ய முயன்ற தாக 5 ஆர்எஸ்எஸ் காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலி பர் சங்க அடூர் பகுதி செயற்குழு உறுப்பினரும் கடம்பநாடு கிழக்கு பகுதி செயலாளருமான சுனில் சுரேந்திரனை (27) வெட்டி படுகாயம் ஏற்படுத்தினர். இதில், தலைமறைவாக இருந்த சகோ தரர்களான ஸ்ரீநாத் (32), ஸ்ரீராஜ் (28), குற்றவாளிகள் தப்பிச் செல்ல உதவியதாக விக்ரமன் பிள்ளை (29), சந்தோஷ்குமார் (39), உன்மேஷ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சனியன்று மாலை டி.ஒய். எப்.ஐ., மாநில மாநாட்டுப் பணி கள் தொடர்பாக பைக்கில் மலங் காவுக்குச் சென்று கொண்டிருந்த போது, பைக்கை நிறுத்தி, சுனிலை எட்டி உதைத்துள்ளனர். உடம்பிலும் தொடைகளிலும் ஆழமான வெட்டுகள் உள்ளன. சுனில் அடூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்திற்குப் பிறகு தலை மறைவாகிய குற்றவாளிகள், உறவினர் சந்தோஷ் குமாரின் வீடான கொட்டாரக்கரா கொட்டத் தலவில் இருந்து சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்ட னர். ராணுவ அதிகாரியான ஸ்ரீராஜ் விடுப்பில் உள்ளார். சம்பவத்திற்குப் பிறகு பணி யிடத்திற்கு செல்ல முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார்.