tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 150.89 கோடி சிறப்பு ஊக்கத் தொகை

சென்னை,ஜன.8- தமிழ்நாட்டில் 91,120 விவசா யிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக, மொத்தம் ரூ. 150, 89 லட்சம் வழங்கும் பணி யினை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமைச் செயலகத்தில் 5 கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி  தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசு ஆண்டு தோறும்  கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையை நிர்ணயம் செய்து வருகிறது. கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒன்றிய அரசு நிர்ண யிக்கும் விலைக்கு மேல் கூடுதலாக தமிழ்நாடு அரசு ஊக்க த்தொகை வழங்கி வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை தனி நிதி நிலை  அறிக்கை 2021-2022 அறிவிப்பின் படி, கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு  ரூ.42.50 சிறப்பு ஊக்கத்தொகை யாக டன் ஒன்றிற்கு ரூ. 150 என மொத்தம் ரூ. 192.50 தமிழ்நாடு அரசால், ஒன்றிய அரசின் நியாய மான மற்றும் ஆதாய விலையான ரூ.2,707.50யை விட டன் ஒன்றிற்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்படி 2020-21 ஆம் அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைக ளுக்கு கரும்பு வழங்கிய பதிவு  பெற்ற விவசாயிகளுக்கு டன்  ஒன்றிற்கு ரூ.2,900 கிடைக்கப் பெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசால்,  2020-2021 அரவைப் பருவத்தில் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலை கள், 15 கூட்டுறவு சர்க்கரை ஆலை கள் மற்றும் 17 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 78 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய தகுதியுடைய 91 ஆயிரத்து 120 விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை யாக, மொத்தம் ரூ. 150 கோடியே 89 லட்சம் வழங்கும் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்தில் 5 கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.