சென்னை,ஜன.8- ரூ.11 கோடி மதிப்பில் நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 எக்டர் பரப்பளவில் செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (ஜன. 8) தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்திப் பயிரா னது, சராசரியாக 1.62 லட்சம் எக்டர் பரப்பள வில் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு எக்டருக்கு 411 கிலோ உற்பத்தித் திறனுடன் 3.92 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படு கிறது. தமிழ்நாட்டில் சுமார் 2000 நூற்பாலை கள் இயங்குவதால், நாட்டின் பருத்தி நூற்புத் திறனில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உயர்தர பருத்தி உற்பத்திதிறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தி நூற்பாலைகளின் பெருகிவரும் தேவைக ளைப் பூர்த்தி செய்திட மேலும் ஒரு சிறப்பம்ச மாக, பருத்தி விவசாயிகளின் நலன்கருதி, ரூ.11 கோடி மதிப்பில் நீண்ட இழை பருத்தி சாகுபடிமற்றும் ஒருங்கிணைந்த உத்தி களை 25,000 எக்டர் பரப்பளவில் செயல் படுத்த நீடித்த நிலையானபருத்தி இயக்கம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர், சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.