சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடி பரிசு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர், ஜூலை 17- பெரம்பலூர் மாவட்டத்தில் “சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை யும், சமூக ஒற்றுமையினையும் கடை பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளை தேர்ந் தெடுத்து தலா ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது கள்” வழங்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் அறி வித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மேற்கண்ட பரிசுத் தொகை அரசு வழிமுறைகளில் தெரி வித்துள்ள உரிய செயல்திறன் அளவீடு கள் மற்றும் நல்லிணக்கத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஊராட்சி தேர்வு செய்யப்படும். மேற்கண்ட விவரப் படி சமூக நல்லிணக்க ஊராட்சிக் கான விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. இதற்கான விண்ணப்பபடிவம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளா கத்தில், தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. தகுதியுடைய ஊராட்சிகளே தாங்களாகவோ அல் லது பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள் - தணிக்கை) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலகத்தினை அணுகி விண்ணப்ப படிவத்தினை பெற்று அதில் கேட்கப் பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான அனைத்து ஆவ ணங்களுடன் ஜூலை 25 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.