tamilnadu

ரயில்களில் ரூ.84கோடி அபராதம் வசூல்

சென்னை, மார்ச் 1- தெற்கு ரயில்வேயில் பயணச்சீட்டு இல்லாதவர்களிடம் அபராதமாக ரூ 83.99 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 22.9 விழுக்காடு அதிகமாகும். அதேபோல் சென்னை கோட்டத்தில் 6.33 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூபாய் 29.86 கோடியும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3.10 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிக ளிடம் அபராதமாக ரூ 16.53 கோடியும் வசூலாகியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் 2.70 லட்சம்  பயணிகளிடம் அபராதமாக  சேலம் கோட்டத்தில் 1.69 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூபாய் 9.61 கோடியும், திருச்சி கோட்டத்தில் 1.12 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூ. 6.02 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே, பயணிகள் ரயிலில் உரிய பயணச்சீட்டு மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் பயணம் செய்வதோடு, அனுமதிக்கப்பட்ட அளவில் உடைமைகளை எடுத்துச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.