வி.பி.நாகைமாலி சிபிஎம்: நாகை மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி நாகை ஊராட்சி ஒன்றியம் வடக்கு பொய்கைநல்லூர் கடற்கரை கிராமமாகும். இங்கு 6 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தின் வாழ்வாதாரம் தோட்டப் பயிராகும். குறிப்பாக மா, கத்திரி,வெண்டகை, கீரை வகைகள் பயிரிடுகிறார்கள். டெல்டா மாவட்டத்தை தாக்கிய கஜா புயலுக்கு பிறகு விவசாயிகளின் எதிர்க்கா லம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் ஊருக்குள் உட்புகுந்ததால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. குடி தண்ணீரும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து விவசாயத்தையும், மக்களையும் பாதுகாக்க பொய்கை நல்லூர் கிராமத்தில் தடுப்பணை கட்ட அரசு முன்வருமா? அமைச்சர் துரைமுருகன்: காவிரி டெல்டா பகுதியில் 36 ஆறுகள் உள்ளது. காலப்போக்கில் இந்த ஆறுகளில் கடல் நீர் உட்புகுந்துவிட்டது. 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயம் பாதித்திருக்கிறது. குடிநீர் கிடைக்கவில்லை. ஆடு-மாடுகள்கூட தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டி ருக்கிறது. இதனால் தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகளில் இருக்கும் பெரும்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அரசு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. ஆசிய வங்கி நிதி உதவியுடன் 5 திட்டங்களும், நபார்டு மற்றும் மாநில அரசின் நிதியிலி ருந்தும் 11 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக, நாகை மாலி குறிப்பிட்டுள்ள பொய்கைநல்லூரில் 780 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பனை ஒன்று கட்ட திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட் டுள்ளது. விரைவில் கட்டிக்கொடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் கடல் நீர் மேலும் உட்புகுந்தால் பெயரி ஆபத்தை ஏற்படுத் தும். எனவே, எவ்வளவு தொகை செலவா னலும் தடுப்பணைகள் கட்டிக்கொடுக்கப் படும்.
ரூ.100 கோடியில் துறைமுகம்
ஓ.எஸ்.மணியன் அதிமுக: வேதாரண்யம் தொகுதி வெள்ளப்பள்ளத்தில் 100 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஆறு மாதமாக வேலை நடைபெறாமல் உள்ளது. உடனடியாக பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்: கடந்த ஆட்சி காலத்தில் முறையாக அனுமதி பெறாததால் பணிக ளில் தொய்வு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஒன்றிய அரசின் அனுமதி மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதால் பணிகள் விரைவில் முடிக்கப் படும்.
செவிலியர் பயிற்சி பள்ளி
கடம்பூர் ராஜூ அதிமுக: கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோவில் பட்டியில் செவிலியர் கல்லூரி அமைக்க 2020 ஆம் ஆண்டு நிலமாற்றம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டு களாக பணி நடைபெறாமல் இருந்து வருகிறது. மாவட்டம் தோறும் செவிலியர் பயிற்சி பள்ளி அல்லது கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் செவிலியர் கல்லூரி அமைக்க வரும் நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
நவீன அரிசி ஆலைகள்
கோவி. செழியன் திமுக: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் மரத்துறை கிராமத்தில் நேரடி கொள் முதல் நிலையம் அமைக்கவும், 16 இடங்களில் சொந்த கட்டிடம் கட்டிக்கொடுக்கவும், மண்சார்ந்த தொழில் பூங்காவும் நவீன அரிசி ஆலை அமைத்து கொடுக்கவும் அரசு முன்வருமா? அமைச்சர் அர. சக்கரபாணி: நபார்டு வங்கியின் மூலம் 150 முழுநேர நேரடி கொள் முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டிக்கொடுக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தஞ்சை, திருவாண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 6 இடங்களில் நவீன அரிசி ஆலை அமைத்துக்கொடுக்கப்படும்.
சிறுதானியம் கொள்முதல்
மார்கண்டேயன் திமுக: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதியில் அதிகமாக விளையும் உளுந்து, பாசிப்பயிறு போன்ற சிறுதானியங்களை விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யுமா? அமைச்சர்: தற்போது நெல் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. சிறு தானியங்களை கொள்முதல் செய்ய துறை சார்பில் ஆய்வுகள் நடந்து வருகிறது.