tamilnadu

இரண்டாவது நாளாக விசைத்தறி வேலைநிறுத்தம்

கோவை/திருப்பூர், ஜன. 10 - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி நெசவுக் கூலி உயர்வு கோரி விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை அன்றும் முழு மையாக நடைபெற்றது.  ஏழாண்டுகளுக்கு மேலாக நெசவுக் கூலி உயர்வு கொடுக்காமல் ஜவுளி வியா பாரிகள் மறுத்துவரும் நிலையில் கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் அரசுத் தரப்பில் பல்லடம் ரக துணி உற்பத்திக்கு 20 சத விகிதம், சோமனூர் ரக துணி உற்பத்திக்கு 23 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் அமல் படுத்த ஜவுளி வியாபாரிகள் மறுத்து வரு கின்றனர்.

இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கங்கள் கூடிப் பேசி, அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்க வலியுறுத்தி ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர். இதற்கிடையே தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமை கொரோனா தடுப்பு முழு ஊர டங்கை அறிவித்திருந்தது. அதன்படி ஆலை கள், விசைத்தறிகள் இயக்கம் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டாலும், திட்டமிட்டபடி கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று விசைத்தறி உரிமையா ளர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

 இரண்டாவது நாளான திங்களன்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறிகள் இயக்கம் முழுமையாக முடங்கி யது. குறிப்பாக சோமனூர், பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்பட விசைத்தறி மையங்களில் நூறு சதவிகிதம் விசைத் தறிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. நாளொன்றுக்கு ரூ.60 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி என்ற அடிப்படையில் இரண்டு நாட்களில் ரூ.120 கோடி மதிப்பி லான துணி உற்பத்தி முடங்கியது. 5 லட்சத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக விசைத்தறியாளர் கூட்டமைப்பின் செயலா ளர் வேலுச்சாமியிடம் கேட்டபோது, அனை த்து பகுதிகளிலும் வேலைநிறுத்தம் வெற்றி கரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை அரசுத் தரப்பில் இருந்தோ, ஜவுளி வியாபாரி கள் தரப்பில் இருந்தோ எங்களிடம் பேச்சு வார்த்தைக்கு யாரும் அழைக்கவில்லை. எனவே அறிவித்தபடி இந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வரக்கூடிய நாட்களிலும் தொடர்ந்து நடைபெறும். ஆட்டோ லூம், நவீன விசைத்தறிகள் வைத்திருக்கக்கூடியவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்  என்று கூட்டமைப்பு சார்பில் கேட்டிருந் தோம். அந்தந்த கிராம அளவில் விசைத்தறி யாளர்கள் பேசி ஆதரவு கோரிய நிலை யில் பல பகுதிகளில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொங்கல் பண்டிகைக்கு பின்னர் கூடிப் பேசுவோம். அதுவரை இந்த வேலை நிறுத்தம் தொய்வில்லாமல் தொடரும் என்று தெரிவித்தார்.