ஈரோடு, ஏப்.16- பெருந்துறையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தொடங்கி வைத் தார். ஈரோடு மாவட்டத்தில் 33-வது சாலை போக்குவரத்து விழிப் புணர்வு வாரத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் பெருந்துறை வெங்கமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த ஓட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தொடங்கி வைத்தார். இந்த மாராத்தான் ஓட்டமானது வாய்க் கால் மேடு வழியாக சென்று கொங்கு பொறியியல் கல்லூரி யில் முடிவடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பெருந்துறை டி.எஸ்.பி.கவுதம்கோயல், காவல் ஆய்வாளர் மசூதாபேகம் மற்றும் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.