tamilnadu

img

ஜுலை 22-இல் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல்

ஜுலை 22-இல் எம்.சின்னதுரை எம்எல்ஏ  தலைமையில் சாலை மறியல்

தீயணைப்பு நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

புதுக்கோட்டை, ஜுலை 14-  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையம் இடம் மாற்றத்தைக் கண்டித்து, ஜூலை 22-இல் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. கறம்பக்குடியில் இயங்கி வரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை, கறம்பக்குடியை விட்டு வெளியே கொண்டு செல்வதைத் தடுத்திடும் வகையில், கறம்பக்குடியிலேயே தொடர்ந்து இயங்கிட வலியுறுத்தி, அனைத்துக் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கருத்துரை வழங்கினார். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இ.க.மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி, மதிமுக, மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேசினர். கூட்டத்தின் முடிவாக, ஜூலை 22 ஆம் தேதி கறம்பக்குடியில் வர்த்தக, வியாபாரி சங்கத்தினர் நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது எனவும்,  அன்றைய தினம், அனைத்துக் கட்சிகள் சார்பில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் துரை.அரிபாஸ்கர் வரவேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சேசுராஜ் நன்றி கூறினார்.