அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ரியாத் உச்சி மாநாடு நவ. 11 திங்களன்று நடைபெற்றது. இதில் சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் பாலஸ்தீனப் பிரச்சனை குறித்து ஆற்றிய உரை யில், பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார். பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையில் வெறும் கண்டனங்களும் அறிக்கைகளும் போதாது என்று வலியுறுத்திய அவர், செயல்வழி தீர்வுகளை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கடந்த கால முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், 1991-ல் அமெரிக்காவின் நல்லெண்ண முயற்சிகளும், 2002-ல் முன்வைக்கப்பட்ட அமைதித் திட்டங்களும் எவ்வாறு பலனளிக்கவில்லை என்பதை விளக்கினார்.
இஸ்ரேலின் செயல்பாடுகளை நாஜிக்களின் செயல்களுடன் ஒப்பிட்ட அசாத், மேற்குலகம் இஸ்ரேலின் கூட்டாளியாக மாறியுள்ளதை விமர்சித்தார். “நமது மொழி சமாதானம், அவர் களின் மொழி படுகொலை” என்று குறிப்பிட்ட அவர், இஸ்ரேல் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் ஒரு சக்தி என்றும் சுட்டிக்காட்டினார். பாலஸ்தீன மக்களின் அடிப்படை உயிர்வாழும் உரிமையே பறிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற உரிமைகள் குறித்த விவாதங்கள் அர்த்த மற்றவை என்று குறிப்பிட்ட அவர், இனப்படு கொலையை உடனடியாக நிறுத்துவதே தற்போதைய முதன்மைக் கடமை என்றார். தமது உரையின் முடிவில், வெறும் கண்ட னங்களுக்கும், கோபங்களுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கான வேண்டுகோள்களுக்கும் அப்பால் செயல்திட்டங்கள் தேவை என்று வலியுறுத்தினார். அத்தகைய செயல்திட்டங்கள் இல்லாமல் போனால், நாமும் இந்த இனப்படு கொலையின் பங்காளிகள் ஆவோம் என்று எச்சரித்தார். “நாஜிசத்தால் பாதிக்கப்பட்டதாக வெளியில் காட்டிக்கொண்டே, அதே நாஜிசத்தை உள்மனதில் ஆராதிப்பவர்கள்” என இஸ்ரேலின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். மேலும், “திரு டனிடம் சட்டத்தையும், குற்றவாளியிடம் நீதியை யும், கொலைகாரனிடம் மனிதநேயத்தையும் பேச முடியாது” என்று குறிப்பிட்டார். இறுதியாக, பாலஸ்தீன மற்றும் லெபனான் மக்கள் நல்லெண்ணத்திற்கு மிகப்பெரிய விலை கொடுத்துவிட்டதாகவும், இனி நல்லெண்ணத்தை செயல்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் தமது உரையை நிறைவு செய்தார்.