tamilnadu

img

திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை  கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.1-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நிகழ்வில் சந்தா இறுதி தொகை வழங்கக் கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33 இல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் கோப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் நிலுவையில் உள்ளதால், விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க கூறியும்,  கடந்த 17.12.2024-இல் சென்னை எழிலகத்தில் நடைபெற்ற 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் நான்கு மாதத்தில் தீர்வு வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட வருவாய் நிர்வாக ஆணையருக்கு நினைவு படுத்த வேண்டியும், மேலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாயன்று, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாலை முதல் காலை வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நிகழ்வில் வட்டத் தலைவர் இராஜ. முத்துவேல் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஆர். பாலசுந்தர் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் எம். பாலமுருகன் விளக்கவுரையாற்றினார். வட்ட துணைச் செயலாளர் க.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏ. தமிழரசன் நன்றி உரையாற்றினார்.