சென்னை, மார்ச் 17 - தொழிற்சங்கங்கள் நடத்தும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் ஓய்வூதியர்களும் கலந்து கொள்கின்ற னர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய தொழிற்சங்கங்கள், சுயேட்சையான சம்மேளனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து மார்ச் மாதம் 28-29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. 32 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் உலகமய கொள்கைக்கு எதிரான தொடர் போராட்டமாக இந்த இருநாள் வேலைநிறுத்தம் ஒரு புதிய பரிமாண மாக அமைய உள்ளது. ஒன்றிய அரசு அனைத்து அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருகிறது. சொத்துக்களை விற்கும் வகையில் ‘தேசிய பணமாக்கல்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
ரயில்வே, பாதுகாப்பு, டெலிகாம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத் துறை களையும் தனியார் மயமாக்கத் துடிக்கிறது. தொழிற்சங்க இயக்கத்தை நசுக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களை நாசம் செய்து வருகிறது. பிஎப்ஆர்டிஏ சட்டத்தின் மூலம் என்பிஎஸ் திட்டத்தை அமலாக்கி ஓய்வூதிய உரிமைகளை பறிக்க மாநில அரசுகள் புதிய சட்டங்களை கொண்டு வரத் துடிக்கின்றன. இந்நிலையில் ஒன்றிய அரசின் விரைவான தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க இரண்டு நாள் நாடு தழுவிய ஒன்றுபட்ட வேலைநிறுத்தத்தை இந்தியத் தொழி லாளி வர்க்கம் நடத்துகிறது. இந்த போராட்டத்தை ஆதரிப்பதோடு, தொழிற்சங்கங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்டிகளில் மாவட்டத் தலைநகரங்க ளில் ஓய்வூதியர்கள் தர்ணா, ஆர்ப் பாட்டம் நடத்துதல், பிற அமைப்பு களுடன் கூட்டாக இணைந்து இயக்கத் தில் ஈடுபடுதல் போன்றவற்றில் ஈடு படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.