நாகர்கோவில், ஜன.18 - இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம் 62 ஆவது நினைவு நாளையொட்டி, சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரம் சார்பில் வேப்பமூடு பகுதி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகர குழுச் செயலாளர் எஸ்.அருணா சலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகரக் குழு உறுப்பி னர்கள், வாலிபர் சங்க மாநகர ஒருங்கி ணைப்பாளர் ரோஷன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் தா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் தோழர் ப.ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜா, பி.அருள்குமார், மாநகர செயலாளர் ஆர்.இசக்கிமுத்து, பொரு ளாளர் கே.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் மரியாதை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத் தின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ், நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள, அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாகர்கோவில் வருவாய் கோட்டாட் சியர் எஸ்.காளீஸ்வரி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவ லர் பா.ஜான் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்லெட் சுஷ்மா, அகஸ்தீஸ்வ ரம் வட்டாட்சியர் முருகன், மண்டல தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பி னர்கள் விஜிலா ஜஸ்டஸ், கௌசிகா, மோனிகா கலந்து கொண்டனர்.