tamilnadu

புத்தாக்க நிறுவனங்களுக்கு ஆதார நிதி அறிவிப்பு

சென்னை, பிப். 27- தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் செறிவார்ந்த முன்னெடுப்புகளில் ஒன்று தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங் களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதி வழங்கும் திட்டம் (தமிழ்நாடு தொடக்க விதை மானிய நிதி) ஆகும். தமிழகம் உலகளாவிய அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழி ல்கள் தொடங்குவதற்கு ஏற்ற களமாகவும் இருக்க வேண்டும் என்பதனை அடிப் படை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது தமிழ் நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க செயலகம் (தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம்) இந்த நோக்கத்திற்கு பயனளிக்கும் வகையில்,  தமிழகத்தில் தொடக்க நிலை யில் உள்ள புத்தொழில்  நிறு வனங்களை தகுதிவாய்ந்த நடுவர் குழு வழியே தேர்வு செய்து, ஆரம்ப கட்ட ஆதார நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் www.start uptn.in இல் உள்ளன. தமிழ கத்தில் பதிவு செய்யப்பட் ்டுள்ள அதில் பதிவு செய்ய விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 11ஆம் தேதியாகும். வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளை பற்றி அறிந்து கொள்ள www. startuptn.in இணைய தளத்தினை பார்வையி டவும். ஏதேனும் கேள்விகள் இருப்பின் support@startup.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.