tamilnadu

img

சின்னாபின்னமான சிந்துபூந்துறை

டிசம்பர் 17 இரவு வரை தாமிரபரணிக் கரையோர நகர வாசிகள் ஏதோ வெள்ளம் வரும்; வடிந்து விடும் என்று  தான் நினைத்தார்கள். டிசம்பர் 18 தொடங்கிய அந்த 12 மணி தான் சுனாமி யின் தொடக்கம்.  சுமார் 1 லட்சம் கன அடி நீருடன் (காட்டாறுகள் உள்பட)   ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன் வெயிட்’டுடன் ஓடிவந்த ‘பொருநையாறு’ அதன் இருகரை களையும் தாண்டிப் பொங்கி வழிந்த தில் தான் அழிவு ஆரம்பமானது. கரையோரப் பகுதிகளான குறுக்குத் துறை, சிஎன் கிராமம், மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை, காமராஜர்தெரு, செல்வி நகர், கீழத்தெரு, புதுஅம்மன் கோவில் தெரு, சாலைத்தெரு, மேக லிங்கபுரம், உடையார்பட்டி, மணி மூர்த்தீசுவரம், அருகன்குளம் என  வீடுவீடாக கதவைத் தட்டித் திறந்தா லும் திறக்காவிட்டாலும் அதன்  சக்(கத்)தியைக்காட்டி நுழைந்தது, தாமிரபரணி. கீழ்த்தளத்தில் இருந்த வர்கள் முன்போ பின்போ வெளியேறி உயிர் தப்பினர். (உயிர்ச்சேதம் தவிர்த்தாலும் பொருட்சேதம் சொல்லி மாளாது). 

இதோடு, கைலாசபுரத்தில் பொங்கிய வெள்ளம், கண்ணம்மன் கோவில்தெரு, ஈரடுக்கு மேம்பாலம், சுவாமி நெல்லையப்பர் சாலை வழி யாக சந்திப்பு பேருந்து, ரயில் நிலை யங்களில் புகுந்தது. அப்படியே (பழைய) மாலைமுரசு, பரணி,  ஜானகிராம் வழியாக சிந்துபூந்துறைக் குள் வெள்ளத்தின் இன்னொரு கரம் புகுந்து தாக்கியது.  கிழக்கிலும் மேற்கிலுமாக இருமுனைத்தாக்குதலில் சிந்து பூந்துறை சிக்கி துவம்சமானது.  கீழ்த்தளங்கள் அனைத்தும் வெள்ளத் தால் சூறையாடப்பட்டன. மாடிகளில் தஞ்சம் புகுந்தோர் விடிய விடிய கவலை யோடு வெள்ளத்தை அளவிட்டுக் கொண்டு எப்போது விடியும் என்று கண்விழித்துக் காத்திருந்தனர். ஆனால் விடிந்தாலும் வெள்ளம் வடி வேனா என்று உயர உயர ‘வளர்ந்து’ கொண்டே இருந்தது. மதியம் 12 மணிக்கு தட்சிணமாற நாடார் சங்கக் கட்டிடம் எதிரே 12  அடி உயரத்திற்கு வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. ஆங்காங்கே மாடியில் நின்று தவித்துக் கொண்டு இருந்தவர்கள், மீட்பு, நிவாரணம் எது வும் இல்லையே என்று கோபப்பட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் யாரா லும் அணுக முடியாத வேகத்துடன் வெள்ளம் ஓடிக் கொண்டு இருந்தது. தப்பித்தவறி படகுகள் வந்த போதும் தாமிரபரணி ஆற்று வெள்ள த்தை நோக்கி அதிவேகத்தில் இழுக்கப் பட்டதால் அவை தப்பித்துச்சென்றன. அருகில் கடற்கரை இல்லாததால் மீட்புப்படகுகளின் எண்ணிக்கையும் குறைவு. 

இதற்குள், மாலை 6 மணி. -அப்போதுதான் வெள்ளம் “இஞ்ச் பை இஞ்ச்” ஆக  வடியத்தொடங்கி, மக்க ளின் பயத்தைப் போக்கத் தொடங்கி யது. அதற்குள் கன்னியாகுமரியில் இருந்து கூடுதலாக படகுகளோடு மீனவர்கள் வரவழைக்கப்பட்ட பின் மீட்புப் பணிகள் வேகம் எடுத்தன.   கடற்சீற்றத்தோடு போராடிய அனுபவம் வாய்ந்த அவர்கள் ‘கடப்புரத்து பாஷை’ பேசிக் கொண்டு, சிரமப்பட்டு படகுகளை ஓட்டி வந்து வெள்ளத்தில் சிக்கி இருந்தோ ரை மீட்டு, அண்ணா சிலை அருகில் மேட்டுப்பகுதியில் இறக்கி விட்டனர். அங்கிருந்து பக்கத்து திருமண மண்டபத்திற்கு அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். படகுகளில் வரும் போது தான் வெள்ளத்தின் ஆழத்தையும் சீற்றத்தை யும் கண்டு எல்லோரும் திகைத்துப் போனார்கள்.  மதியம் வரை, ‘இங்கு ஒரு வனும் வந்து எட்டிப்பார்க்கக் கூட வர வில்லை’ என்று வசைமொழி பாடிய வர்கள் வெட்கித்துத் தலைகுனிந்தனர்.  அடுத்தடுத்து, இவ்வாறாக மீட்புப்படகுகள் குடும்பம் குடும்பமாக எல்லோரையும் மீட்டு நிவாரண முகாம் கொண்டு வந்து சேர்த்தன. இப்படி மீட்பு நடவடிக்கைகள் விடிய விடிய மழைத்தூறலின் நடு விலும் நடந்து முடிந்த நிலையில் வெள்ளமும் வடிந்தது. என்றாலும், சந்திப்பு பேருந்து நிலையம் முதல் சிந்துபூந்துறை முகப்பு வரை தாழ்வான பகுதி என்பதால் இடுப்பளவு வெள்ளம் நின்று ஜங்ஷனின் பிரதான வடிகால் வழியே வடிந்து கொண்டு இருந்தது. 

ராத்திரி முழுக்க நிவாரண முகாமில் வீட்டைப் பற்றிய நினைவோடு தூங்காமல் தவித்தவர்கள், காலை யில் முதல் வேலையாக ஓடோடி வந்து, வீடுகளைத் திறந்து பார்த்து திகைத்துப் போனார்கள். அவர்களின் இத்தனை ஆண்டு கால உழைப்பையும் வெள்ளம் சீரழித்துச் சென்றிருந்தது.  ஜங்ஷன் முழுவதும் கடை வைத்திருப்பவர்களும் காலையில் முதல் வேலையாக அவரவர் கடையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே எல்லாமே பாழ்...பாழ்...பாழ்...  என்ன ஒரே ஓர் ஆறுதல். ஒன்றிரண்டு உயிரிழப்போடு நின்று விட்டது. வெள்ளம் வருமுன்பே மின்விநி யோகத்தை நிறுத்தியது இதற்கு முக்கியக் காரணம். உயிர்ச்சேதம் மிகக்குறைவு. பொரு ட்சேதமோ கணக்கிட முடியாதது.  முன்எச்சரிக்கைகளால் விழித்திருந்து மேட்டுக்குத் தாவிய தால் உயிர்பிழைத்த எண்ணற்ற ஜீவன் களில் குட்டிப்பையன் “ஆதன்” உள்ளிட்ட நாங்கள் நால்வரும் உண்டு என்பதையும் பதிவிட்டு, இன்னல் தந்த பேரிடர் என்றாலும், இதையும் ஒரு  திகில் அனுபவமாகவே ஏற்றுக் கொண்டு, துயர் துடைக்க முன்வந்த நல் உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.  

-மணிராஜ், சிந்துபூந்துறை.