tamilnadu

தனிச்சட்டம் இயற்றுக: சிபிஎம்

சென்னை, ஆக.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட் தீர்மானம் வருமாறு: 

அண்மையில் உச்சநீதி மன்றம், அரசுப் பணி களில் பதவி உயர்வின் போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு கொள்கை யை பின்பற்றக் கூடாது என கூறி யுள்ளது. இது இந்திய அரசியல் சாசன சட்ட சரத்து 16(4) இன்படி பதவி உயர்வில், பட்டியலின மற்  றும் பழங்குடி மக்களுக்கு முன்னு ரிமை வழங்க வழிவகை செய்துள் ளதை நிராகரிப்பதாகும். மேற்படி அரசியல் சாசன சட்டம் (16 4-ஏ)-இன்படி தற்போது ஒன்றிய அரசு பணிகளிலும் பதவி உயர்வின் போது, பட்டியலின மற்றும் பழங்குடியின பணியாளர்களுக்கு முன்னுரிமை கிடைத்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசுப் பணியில் உள் ளோருக்கான பதவி உயர்வு நேரங்  களில் முன்னுரிமை வாய்ப்பை கை விடும் போது, சமூக ரீதியில் பின்  தங்கிய பிரிவினர் பெரும் பாதிப்பை  சந்திக்கும் நிலை உருவாகும்.

பிரதி நிதித்துவம் குறையும், சமூக நீதி பறி போகும். ஏற்கனவே பல்வேறு போட்டி தேர்வுகள் மூலம், ஒரு பகுதி உயர்நிலை பணியிடங்கள் நேரடி நியமனம் இல்லாமல் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் இட ஒதுக்கீடு கொள்கை மூலம் பட்டியலின மற்றும் பழங்குடி மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், உள்ஒதுக்கீடு மூலம் பயன்பெறும் ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி, முன் னாள் ராணுவத்தினர் மற்றும் தமிழ்வழி பயின்றோர் ஆகியோர் தற்போது அனுபவித்து வரும் முன்  னுரிமை வாய்ப்பினை இழக்கும் நிலை உருவாகும். எனவே, தமிழ்நாடு அரசு பதவி  உயர்வுகளில் பின்பற்றப்படும் தற்  போதைய நடைமுறை தொடரு வதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் சட்ட மன்றத்தில் தனி சட்டம் இயற்று வது அவசியம் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டு கிறது. அதேபோல் மேற்படி பதவி  உயர்வு மூலம் உருவாகும் காலிப்  பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படு வது உள்ளிட்டு வேலை வாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு, சமூக நீதி யை பாதுகாப்பதில் ஜனநாயக சக்தி கள் போராட முன்வர வேண்டு மென அறைகூவி அழைக்கிறது.