tamilnadu

வீடு இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கியவர் உயிருடன் மீட்பு

தூத்துக்குடி, ஜன.15- தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடு களுக்குள் சிக்கியவர் உயிருடன் மீட்கப்பட்டார். தூத்துக்குடி மேல சண்முகபுரம், பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். சென்னை துறைமுகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அமல புஷ்பம் (50). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது தம்பி அருள்மணி (54) விருதுநகரில் வசித்து வருகிறார்.  சனிக்கிழமையன்று காலை அக்கா வீட்டுக்கு வந்திருந்த அருள்மணி, வீட்டுக்குள் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நிலைய அலுவலர்கள் மகா ராஜன் மற்றும் சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த அருள்  மணியை உயிருடன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டவுன் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.