பத்திரப்பதிவு அலுவலகத்தை மீண்டும் திறக்க கோரிக்கை
தஞ்சாவூர், ஆக. 4- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் பேரூராட்சி பகுதியில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். மீண்டும் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருமகளூர் வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் திங்கட்கிழமை கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், வர்த்தக சங்கத் தலைவர் அய்யப்பன் தலைமையிலும், செயலாளர் தண்டாயுதபாணி, பொருளாளர் ராமச்சந்திரன், கருப்பையா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேராவூரணி காவல் ஆய்வாளர் பசுபதி, காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் அலாவுதீன், உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையேற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.