tamilnadu

img

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரிக்கை

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு  மாத ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரிக்கை

திருவாரூர், ஜுன் 28-  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் வலங்கைமான் வட்ட மாநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.  மாநாட்டுக்கு தலைவர் எஸ்.புஷ்பநாதன் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் என்.சண்முகம் சங்கக்கொடியை ஏற்றினார். மாவட்டச் செயலாளர் வி.முனியன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.  வட்டச் செயலாளர் ஏ. சண்முகம் வேலை அறிக்கையையும் வட்டப் பொருளாளர் பி.ஜெயராமன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.  முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல், 70வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பு ஊதியம் பெற்று ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூபாய் 7850-வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத் தலைவராக எஸ். புஷ்பநாதன், வட்டச்செயலாளர் ஏ. சண்முகம், வட்டப் பொருளாளர் பி. ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அங்கன்வாடி அமைப்பாளர் அவளிவநல்லூர் டி. லில்லி சுசிலா மேரி நன்றி கூறினார்.