சென்னை,டிச.11- மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் பகுதி சுகாதார செவிலியர்க்கு சமுதாய சுகாதார செவிலியர் என்ற பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு பகுதி சுகாதார செவிலியர் மற்றும் மாநகர சுகாதார செவிலியர் சங்க 6ஆவது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் சனிக்கிழமை (டிச.11) நடைபெற்ற இம்மா நாட்டை அரசு ஊழியர்சங்கத்தின் மாநிலச்செயலாளர் தெ.வாசுகி துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் ஜெ.சரஸ்வதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ஏ.திலகம் வரவேற் ்புரையாற்ற ஏ.பிரேமகுமாரி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொதுசெயலாளர் பெ.திரு மகள் செயலாளர் அறிக்கை யையும் பொருளாளர் சி.சித்ரா நிதி நிலை அறிக்கையை சமர்பித்த னர்.
அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட செயலா ளர் எம்.அந்தோணிசாமி, தென் சென்னை மாவட்ட பொருளாளர் உ.சுமதி, கிராமசுகாதார செவி லியர் சங்கம் மாநில தலைவர் சி.பரமேஸ்வரி, சத்துணவு ஊழி யர் சங்க மாநில தலைவர் ப.சுந்தராம்பாள், வி.விஜயகு மரன் (அனைத்து மருந்தாளுநர் சங்கம்), ஏ.கோபிநாதன் (ஆய்வக நுட்பனர் சங்கம்) ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் முனைவர் தீபா, அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.அன்பரசு ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் அனைத்து செவிலி யர்களுக்கும் கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும், மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளில் பணிபுரியும் செவிலியர்கள் 15 மணிநேரம் தொடர்ந்து பணி புரியும் நிலையை களைந்து மூன்று ஷிப்ட் சுழற்சி முறையில் பணிபுரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜெ.சரஸ்வதி, பொதுச்செய லாளராக பி.திருமகள், பொரு ளாளராக சி.சித்ரா, தணிக்கை யாளராக எஸ்.தேவி புவனேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக மாநில தணிக்கையாளர் எஸ்.ஜமுனா நன்றி கூறினார்.