tamilnadu

img

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வி ஊழியர்கள் கோரிக்கை

சென்னை, ஏப். 22- பள்ளிக்கல்வி தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய  வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து தொகுப்பூதிய ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் பெருந்திரள் கவன ஈர்ப்பு முறையீடு போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில், மாநில, மாவட்ட, வட்டார அலுவலகங்களில் டாடா என்ட்ரி  ஆபரேட்டர்ஸ், பிஆர்சி எஸ்,எம்சி அக்கவுண்ட்ஸ், எம்.ஐ.எஸ். ஒருங்கி ணைப்பாளர்கள், ப்ரோக்ரமர்ஸ், அக்கவுண்ட்ஸ் மேலாளர்கள், அலுவலக உதவி மற்றும் சிவில் பொறியாளர்கள் என பல்வேறு நிலைகளில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு மாதம் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் பல ஆண்டு களாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள், விதவைகள் உட்பட 1400க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது ரூ.12,650 முதல் ரூ.16,100 வரை வழங்கப்படும் ஊதியத்தில் பிடித்தங்கள் நீங்கலாக  ரூ.11,000 முதல் ரூ.14000 பெறுகின்ற னர். தில்லி, அரியான, ஜம்மு காஷ்மீர்  போன்ற பல மாநிலங்களில் இதே  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப் பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். அதைப்போல் தமிழ்நாட்டிலும் பணி நிரந்தம் செய்ய வேண்டும்.

பிறத்துறைகளில் ஓய்வு வயது வரம்பை 58இல் இருந்து 60 வயதாக உயர்த்தியது போல் எங்களுக்கும் வயதை 60ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணி செய்யும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9,000 வழங்க வேண்டும், பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்குவது போன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணி செய்யும் பெண் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினர். இதற்கிடையே  திட்ட ஒருங்கி ணைப்பாளரை சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மகப்பேறு விடுப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கான ஆணையை  வழங்கினார். பிற கோரிக்கைகள் குறித்து 27ஆம் தேதி பேசி தீர்வு  காணலாம் என அவர் தெரிவித் துள்ளார். இந்த போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜெ.வாலன்றின் பிரிட்டோ தலைமை தாங்கினார்.  மாநில பொதுச்  செயலாளர் க.லெட்சுமணன் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் முடித்துவைத்து உரையாற்றினார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாநில பொதுச் செயலாளர் செ.பிரபா கர் மற்றும் பலர் பேசினர்.