சென்னை, பிப். 20- தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் நிராகரிக்கப் பட்ட தமிழக அரசின் அலங் கார ஊர்திகள், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 23 நாட்களில் 2 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ள அலங்கார ஊர்திகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த மா.சுப்பிர மணியன், தமிழகம் முழுவ தும் சென்று வந்துள்ள இந்த அலங்கார ஊர்திகள் பிப்ரவரி 22ஆம் தேதி வரை மெரினா கடற்கரை யில் காட்சிக்கு வைக்கப் படவுள்ளன. இதனை பொது மக்கள் பார்வையிடலாம் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இது வரை இல்லாத வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என வும் தெரிவித்தார்.