தருமபுரி, ஆக.18- காவிரி உபரிநீரை தருமபுரி ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூன்று நடைபயணம் வெள்ளியன்று தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நிறை வடைந்தது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். கர்நாடக மாநிலம் மேகதாட்டு எனும் இடத்தில் தடுப்பணை கட்டு வதற்கு கர்நாடக மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தருமபுரி மாவட்டத்திலும் குடிநீர், பாசன வசதிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே கர்நாடக அரசு காவிரி மேகதாட்டில் அணை கட்டும் முயற்சியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தவேண்டும்; தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும்; காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்ட கட்டு மான பணிகளை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த நடை பயணம் நடைபெற்றது.
வெள்ளியன்று நிறைவுபெற்ற நடைபயணத்திற்கு, மாவட்டச் செயலா ளர் ஏ.குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப் பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப் பினர்கள் பி.டில்லிபாபு, ஆர்.சிசு பாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக தருமபுரி-பென்னாகரம் சாலை மேம்பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சார்பில் மாவட்ட செயலா ளர் கே.கோவிந்தராஜ், நிர்வாகி முரு கன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமபுரி நகரம், குமாரசாமி பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் த.கு.பாண்டியன், சாக்கன் சர்மா ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற நடைபயணத்தில் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். நடைபய ணத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.