tamilnadu

img

வெம்பக்கோட்டையில் மேற்கூரை இல்லாத காலனி வீடுகளை மராமத்து செய்திடுக!

வெம்பக்கோட்டை, ஜூன்.10 வெம்பக்கோட்டையில் இடிந்து விழும் நிலையில் உள்ள காலனி வீடு களை மராமத்து செய்திட நிதி ஒதுக் கீடு செய்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை வட்டத்திற்கு உட்பட்டது மம்சாபுரம் கிராமம். இங்குள்ள இந்தி ரா காலனியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 24  ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டன. தற்போது அவ்வீட்டின் மேற்கூரைகள் மற்றும்  சுவர்கள் ஆகியவை பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த வீடுகளில் வசிக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் உள்னர்.மேலும் பழுதான வீடுகளை மராமத்து செய்து தர வேண்டுமென பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உடனடியாக வீடு களை மராமத்து செய்ய தேவையான நிதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் எம்.முனியசாமி தலைமை யேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.குருசாமி உரையாற்றினார். மேலும் இதில், முத்துராமலிங்கம், அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.